Friday, December 12, 2008

அவதூறு பரப்பும் அதிசாவே! நிறுத்திக் கொள்!

அதிசா இந்தப் பதிவில் இப்படிக் கூறி உள்ளார், 

\\ சரத்குமார் என்பவர் நடத்திவரும் ச.ம.க என்னும் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை அவரது கட்சியின் அடுத்த நெல்லை மாநாட்டில் தெரிவிக்க உள்ளாராம் . அதற்கு முன் குடும்ப அரசியலில் சிறிதும் நாட்டாமில்லாத தன் கட்சியில் தனது மனைவி ராதிகாவுக்கு முக்கிய பதவி தரவேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விரும்புவதாக தெரிவித்தார்.

இதுதாண்டா கட்சி !!   \\

இப்படித் தனது பதிவில் பச்சைத் தமிழன் சரத் குமாரைப் பற்றி தரக் குறைவாக எழுதியுள்ள அதிசாவை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

அந்தக் கட்சியில் உள்ள ஒரே மூத்த உறுப்பினரான சரத்குமார், அந்தக் கட்சியின்  ஒரே மூத்த பெண் உறுப்பினரான மங்கையர் திலகம் ராதிகாவிற்கு முக்கிய பதவி வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

அப்படி அதில் தவறு இருந்தால் அதைக் கண்டிக்க வேண்டியது அந்தக் கட்சி உறுப்பினர்கள்தான் (அப்படி யாராவது இருந்தால்), நீங்கள் இல்லை அதிசா. 

இப்படிக்கு 

சரத்குமார் தற்கொலைப் படை. 
சரத் குமார் 

இந்த திடீர் ப்லாக்குக்கும் இவருக்கும், அல்லது இவருக்கும் அல்லது இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.   

No comments:

Post a Comment